அரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் தலைவர் அல்-கய்தா உயிரிழந்ததாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு..!!
அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் அரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் தலைவர் அல்-கய்தா உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அல்-கய்தா ஜிகாதிகள் இயக்கத்திற்கு தலைமையேற்று செயல்பட்டு வந்த காசிம் அல்-ரெய்மியை அமெரிக்க படைகள் யேமனில் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிரான 2000வது வருடங்களில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இவர் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளார்.
சௌதி அரேபியா மற்றும் ஜேர்மனை மையமாக கொண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு அல்-கய்தாவின் ஏகியூஏபி என்னும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான படைகள் உள்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இது இயங்கி வந்தது. அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் காசிம் அல்-ரெய்மி கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த மாதத்தின் இறுதியில் தகவல்கள் பரவி வந்தன. இதனை மறுக்கும் வகையில், அல்-ரெய்மியின் ஒலிப்பதிவு ஒன்றை கடந்த இரண்டாம் தேதி ஏகியூஏபி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.