தாய்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்..!!
தாய்லாந்தின் வட கிழக்கு நகரான நக்கோன் இரச்சசிமாவிலுள்ள வர்த்தக அங்காடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சமிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அது தவிர, மேலும் 42 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் நடத்திய தாக்குதலிலேயே இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கிதாரி துப்பாக்கிப் சூட்டை நேற்று மாலை தொடங்கிய நிலையில், பாதுகாப்பு படைத்தரப்பினரால் இன்றே சுட்டு கொல்லப்பட்டதாக பொது சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வர்த்தக அங்காடியை அண்டியுள்ள வீடு ஒன்றில் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை தொடங்கிய அவர், பின்னர் இராணுவ முகாம் ஒன்றிலும் தாக்குதலை மேற்கொண்டதன் பின்னரே அங்காடியினுள் புகுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் அறிய முடியாதுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மனநோய் காரணமாக இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிதாரி அங்காடியினில் இருந்த வேளை, பாதுகாப்பு தரப்பினர் நூற்றுக்கணக்கான மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். சீ.சீ.ரி.வி. பதிவுகளுக்கு அமைய கறுப்பு உடை அணிந்திருந்த நிலையில், துப்பாக்கிதாரி முகமூடி அணிந்திருந்துள்ளார்.