லண்டனில் இலங்கையர்கள் 4 பேர் கைது…!!!
லண்டனில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையர்கள் 4 பேரை பயங்கரவாத தடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு போன போதே இவர்கள் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2000 ஆம் ஆண்டு கீழ் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பயங்கரவாத சட்டம் பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டம் 1984 ஆம் ஆண்டு கீழ் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 39 , 35, 41 வயதுடைய சந்தேக நபர்கள் தெற்கு லண்டனின் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண், பிணையில் விடுக்கப்பட்ட போதிலும் அவரிடமும் காவலில் உள்ளவர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.