பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விடுத்த முக்கிய அறிவிப்பு…!!
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்தல் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை விவாதிப்பதற்கான காலத்தை நீடிக்கவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முழுமையாக பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இருப்பினும் பிரிக்ஸிட் திட்டத்தை பிரித்தானிய நாடாளுமன்றில் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் இந்த நிலையில், பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், பிரெக்ஸிட் தொடர்பில் ஒரு ஒப்பந்தமும் இல்லாத நிலையில், தேர்தலை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.