இந்திய மாணவி கனடாவில் படுகொலை.!!
கனடாவின் சர்ரே கவுன்டியில் மர்மமாக கொலை செய்யப்பட்டிருந்த மாணவி இந்தியாவை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கனடாவின் சர்ரே கவுண்டியில் உள்ள வீட்டில் இரு சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் போல உள்ளதாகவும், அதில் ஒரு பெண் மட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்க்ள தொடர்பாக எந்தவொரு எந்த தகவலும் தெரியாத நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தியல் என்பவர், கனடாவில் உள்ள வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டிருந்தது தன்னுடைய மகள் என உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கியில், எனது மகள் கொலை செய்யப்பட்ட நோக்கம் மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பாக கனடா பொலிஸார் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.
“எனது மகள் பிரப்லீன் மாதாரு கவுர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிற்கு படிப்பதற்காக சென்றார். காலை 6 மணிக்கு பொலிஸாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்களிடம் ஒரு மோசமான செய்தி இருப்பதாக, என் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். வேறு எந்தவொரு தகவலும் அவர்கள் வெளியிடவில்லை ” என தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற நிலையில் எங்கள் மகளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள மாணவியின் குடும்பத்தினர் தற்போது கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பயணிக்கவுள்ளனர். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் கனடா வந்த பிரப்லீன் வான்கூவரில் உள்ள லங்காரா கல்லூரியில் படித்து வந்தாக கூறப்படுகிறது.