அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..!!!
அமெரிக்கா எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைக்குமானால் அமெரிக்கா மீது நாங்கள் தாக்குதல் நடத்த வேண்டி வரும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு எரிப்பொருள் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்களிற்கு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.
இருப்பினும் அந்த பயங்கரவாத தாக்குதலை ஈரான் தான் நடத்தியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்யுள்ளார். ஆனால் அமெரிக்காவின் இந்த தவறான குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.