பிரான்சில் ஏற்பட்ட தீ விபத்து…!!!
பிரான்சில் வடக்கு புறநகரான Saint-Ouenயில் உள்ள கார் garage ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
அதையடுத்து இந்த தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் 100 பேர், சம்பவ இடத்திற்கு வந்துள்ளதுனர். 40 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய வேகமாக பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்குள்ளான garage சுமார் 800 சதுர மீற்றர் நிலப்பரப்பை கொண்டது.
இதில் இருந்து அதிகளவிலான கார்கள் அனைத்து தீயில் எரிந்துள்ளது. வானில் பெரும் கரும்புகை எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே போக்குவரத்து சாலைகளில் அதிக வாகனம் நெரிசல்களில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில் தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்க முக்கியமான வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என பாரிசின் தீயணைப்பு பிரிவின் படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் மட்டும் படுகாயம் அடைந்ததாகவும், மற்றவர்கள் தொடர்பில் எந்தவொரு தகவல் வெளியாகவில்லை.