இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரச்சினை காரணமாக காஷ்மீரில் உள்ள 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தொழில் பாதிப்பு…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகளால் பல்வேறு துறைகள் முடங்கி உள்ளதால், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இந்தியா காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி மாநிலத்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு உத்தரவு விட்டுள்ளது.
அதற்கு அமைய அங்கு சென்று இருந்த சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில கூலித்தொழிலாளர்களும் வெளியேறதனால், மாநிலம் முழுவதும் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
காஷ்மீரில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது