3265 கணவன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்..!! இந்தியாவை அதிர வைத்த ரிப்போர்ட்..!!
கேரளாவில் கட்டிய கடந்த நன்கு ஆண்டுகளில் மட்டும் 3000 பெண்கள் கணவரால் பாலியல் வன்முறைக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சுதா என்பவர் கூறுகையில் திருமணமான புதிதில் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆரம்பத்தில் என் கணவர் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வந்தார்.
24 வயதில் திருமணம் ஆன எனக்கு 29 வயதில் அரச வேலை கிடைத்தது. 5வருடங்கள் மகிழ்ச்சியாக கழிந்த வாழ்க்கை வேலை கிடைத்த பின் மாறியது. வேலை செய்யும் இடத்தில் யாருடனும் பேச கூடாது என கட்டளை இட ஆரம்பித்தார். இதனால் கொஞ்சம் மன கசப்பு வந்தது அவர் சொல்வதை கேட்டு நடக்க ஆரம்பித்தேன்.
ஆனால் அவரது போக்கு வேறு விதமாக மாறியது. எவ்வளவு முடியாவிட்டாலும் பாலியல் துன்புறுத்தல் செய்தார். மாதவிடாய் நாட்களில் கூட பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். வீட்டிற்கு என் நண்பர்கள் வந்திருந்தனர் அதன் போது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடீரென அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனால் என்னால் முடியாமல் போனது. எனது பெயரில் தான் வங்கியில் கடன் வாங்கி என் கணவர் வீடு வாங்கினார். அதனால் அரச அனுமதியுடன் வீட்டில் ஒரு பகுதியில் கணவரை பிரிந்து நான் வாழ்கிறேன். எனக்கு இப்போது 45 வயதாகிறது என குறிப்பிட்டுள்ளார். சுதாவை போல் வேறு பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனரா என மதுர் பூமி செய்தி நிறுவனர் நடத்திய ஆய்வில்
குடும்பம் தொடர்பாக கவுன்சிலிங் , பாலியல் பலாத்காரம் தொடர்பான மன நல வைத்தியர்கள் என தகவல் வழங்கியுள்ளனர். இதில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3265 பெண்கள் சுதாவை போல் பாலியல் பலாத்காரம் செய்தப் பட்டுள்ளார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது..! கட்டிய கணவனாக இருந்தாலும் மனைவியின் அனுமதி இன்றி கட்டாய படுத்தி அனுபவிப்பது பாலியல் கொடுமைக்குள் அடங்கும்..!!