நடுராத்திரியில் கடுமையான காது வலியால் துடி துடித்த இளம் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!!
நடுராத்தியில் காது வலியால் துடி துடித்த வியட்நாம் பெண் மருத்துவப் பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!
வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன், நடுராத்திரியில் கடுமையான காது வலியால் துடித்துள்ளார். அதைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் எண்டோஸ் கோப்பி மூலம் தொடர்ந்தும் சில நிமிடங்களில் கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், காதுக்குள் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பெண்ணின் காதில் கீறல் ஏற்பட்டிருந்தது. கீறல் கரப்பான் பூச்சியால் ஏற்பட்டதா அல்லது அதை அகற்றுவதில் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியப்படவில்லை. மேலும் அந்த காயம் குணமடைய சில நாட்கள் எடுக்கலாம்.
ஈரமான வேளையில் பூச்சிகள் தங்குவதற்கு உயர்ந்த பகுதிகளுக்கு செல்லும். அந்த வகையில் காதுப்பகுதியை குகை என நினைத்து கரப்பான் பூச்சி சென்று இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.