பத்திரமாக மீட்கப்பட்ட குடியிருப்பாளர்கள் – மீட்டுவிட்டு பரிதாபமாக உயிரைவிட்ட இளம் குடும்பப்பெண்…!
டெல்லி குர்கான் பகுதியில் 10 மாடிகொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் அதில் குடியிருந்த குடியிருப்பாளர்களை பத்திரமாக மொட்டை மாடிக்கு அனுப்பிவிட்டு புகையினால் உயிரிழந்துள்ளார் அக் கட்டடத்தின் 5-ஆவது மாடியில் குடியிருந்த சுவாதி கார்க் எனும் கட்டட வடிவமைப்பாளர்.
இதில் அவரது கணவரும் குழந்தையும் பாதுகாப்பாக மொட்டை மாடிக்கு அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முதல் தளத்திலே மின்சாரக் கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட புகை கட்டடத்தை விரைவாகச் சூழ்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் அதனை அறிந்துகொண்ட சுவாதி மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவைரும் பாதுகாப்பாக மொட்டை மாடிக்குச் சென்ற பின்னர் அவர் வெளியேறிய சமயத்தில் பத்தாவது மாடியில் பூட்டப்பட்ட அறை ஒன்றின் வாயிற் கதவருகே அக் கதவைத் திறக்க முடியாத நிலையில் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்புப் படையினர் அங்கு ஏற்பட்ட தீயை அணைத்தபின்னர் அவரது உடலைக் கண்டெடுத்துள்ளனர். மக்களைக் காப்பாற்றிவிட்டு தன்னைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்த அப்பெண்ணால் அங்குள்ளவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”