உங்கள் வீட்டில் இந்த மூன்று பொருட்களும் உள்ளதா.??? அப்போ நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டசாலி ..!!
நீங்கள் காலை எழுந்தவுடன் வீட்டில் பூஜை அறையை நன்றாக சுத்தமாகவும், பொறுப்பாகவும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டாலே போதும் சகல செல்வங்களும், நன்மைகளும் உங்களை தேடி வரும் அதோடு உங்கள் தோஷங்களுக்கு ஏற்றவாறு சின்ன சின்ன பரிகாரங்களையும் செய்து வந்தால் உங்களுக்கு இன்னும் பல வகைப்பட்ட அதிர்ஷ்டங்கள் தேடி வரும் என்று கூறப்படுகின்றது.
நம் வீட்டில் உபயோகிக்கப்படும் பொருட்கள் தான் இவை பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய். இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு நம் வீட்டின் சமையலறை, பணம் வைக்கும் இடம் இந்த இரண்டு இடத்தில் வைத்து விட்டால் போதும். உங்களால் முடிந்தால் வீட்டில் குபேர மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. பச்சைக் கற்பூரம் 1, ஏலக்காய் 2, சோம்பு சிறிதளவு இந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சோம்பிலும், ஏலக்காயிலும் வண்டுகள் சேரும். பச்சைக் கற்பூரம் கரைந்து போகும் என்பதால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம்.
பச்சைக் கற்பூரம், ஏலக்காய், சோம்பு ஆகிய மூன்று பொருட்களும் நம் வீட்டில் தனித்தனியாக இருந்திருக்கலாம். ஆனால் சேர்ந்து விட்டால், அதற்கு இருக்கும் சக்தியே தனி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மகிமை உள்ளது. வீட்டில் மங்களகரம் நிறைந்து இருப்பதற்கும் செல்வம் நிலைபெறுவதற்கும் இது ஒரு நல்ல பரிகாரமாக அமையும். அதைத் தொடர்ந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு, ஒரு சிறிய துண்டு லவங்கப்பட்டை குச்சியை அந்த நோட்டில் வைத்து நன்றாக சுருட்டிவிடுங்கள். நீங்கள் சுருட்டியது பிரியாமல் இருக்க பச்சை நிற நூலை வைத்து கட்டிக் கொள்ளவும். பத்து ரூபாய் உடன் சேர்ந்த அந்த லவங்கம் பட்டை கொண்ட முடிச்சை உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். பணவரவு என்றும் நிரந்தரமாக இருக்கும்.
உங்களது பர்ஸ்ஸில் புதினா இலையை வைத்துக்கொள்வது சிறந்தது. யாருக்காவது பணம் எடுத்துக் கொடுக்கும் முன், அந்த இலையை நீங்கள் பார்த்து விட்டு, நான் செலவு செய்யும் பணம் வேறு ஒரு வழியில் எனக்கு திரும்பி வந்து விட வேண்டும் என்று நினைப்போடு பணத்தை செலவு செய்தால் நிச்சயம் உங்களுக்கு செலவு வரவு செலவு வரவு என்ற கணக்கு சீராகவே அமையும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படாது. வாடிய புதினாவை பர்ஸ்ஸில் வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி மாற்றி விட வேண்டும்.
இந்த பரிகாரங்கள் எல்லாமே சின்ன சின்ன பரிகாரங்கள் தான். இதை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு தான் பணவரவு இருந்தாலும் அதை சேமிக்கும் தந்திரத்தை நாம் கற்றுக் கொண்டால் தான் வாழ்வில் முன்னேற முடியும். இதெல்லாம் செய்தால் பணக்காரராகி விட முடியுமா? என்ற எண்ணத்தோடு எந்தவொரு பரிகாரத்தையும் தயவுசெய்து செய்யாதீர்கள். அதனால் உங்களுக்கு எந்தவொரு பலனும் ஏற்படாது. இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நமக்கும் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தோடு செய்வதன் மூலமே நம்மால் பலனை முழுமையாக அடைய முடியும்.