உறங்க பாய் தலையணை பெட் சீட் கேட்டு அடம்பிடிக்கும் கன்றுகுட்டி..! நீங்களே பாருங்கள்..!
மனிதர்களையே மனிதர்கள் கொன்று குவிக்கும் இன்றைய காலத்தில் மாட்டை மடியில் உறங்க வைக்கும் மனிதர்களை பார்ப்பது அதிசயம் அதனால் தான் இதனை உங்களுடன் பகிர்கிறோம்.. பிடித்தால் நீங்களும் பகிரலாம்..! ஆம்பூர் பகுதி வீரங்குப்பத்தை சேர்ந்த அறிவொளி ஆனந்தனும் அவரது குடும்பமுமே இந்த மனிதாபிமான குடும்பம். இவர் ஒரு விவசாயி.
இவர்களிடம் இருந்த பசு ஒன்று கன்று ஈன்றது. குட்டியின் துருதுருப்பை கண்ட குடும்பத்தினர் அதற்கு வேலவன் என பெயர் வைத்து கூப்பிட்டுள்ளனர். தனக்கு பெயர் கிடைத்த மகிழ்ச்சியிலோ என்னவோ தாயிடம் பால் குடிக்க மட்டுமே சென்ற வேலவன் மற்றைய நேரங்களில் குடும்பத்தினருடன் இணைய ஆரம்பித்தது.
முதலில் தாயுடன் சேர்ந்து வைக்கோல் சாப்பிட்ட வேலவன் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்கள் உண்ணும் உணவை சாப்பிட பழகியது. வேலவனுக்கு இட்லி தான் மிகவும் பிடித்த உணவு. அதனால் காலை உணவு அனைவருக்கு இட்லி தான். மிக்ஸர் காரச்சோவு போன்றவற்றை கண்டால் போதும் அவ்வளவு ஆசை. அது மட்டும் இல்லை வேலவன் தாயுடன் இரவில் உறங்குவது கூட இல்லை.
குழந்தைகளுடன் தான் உறங்குவான். பாய் தலைவாணி, பெட் சீட் மூன்றும் வேண்டும் இல்லாவிட்டால் தலையை எங்கள் மேல் வைத்துக் கொண்டு உறங்குவான் என மனிதர்களை பற்றி கூறுவது போல் கூறி முடித்தார் அறிவொளி ஆனந்தன். இத்தனை சுட்டிகள் செய்யும் வேலவனை எப்படி மிருகம் என கூறிவிட முடியும்..!