அரவாணிகள் என்று கூறப் பட்ட “திருநங்கைகளின்” சாபம் மற்றும் ஆசிர்வாதம் பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்.!
திருநங்கைகளின் சாபமும் ஆசிவாதமும் உண்மையா? இந்த கேள்வி இன்று பலரிடம் இருந்தாலும் சாபம் பலிக்கும் என்று சொல்கின்ற பலர் இருகின்றனர். அப்படி சாபம் பலித்து சிலர் இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர். திரு நங்கைகளுக்கு தமிழ் நாட்டில் மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் தற்போது உள்ளது.
அத்துடன் அரசு வேலைகளும் கிடைக்கிறது ஆனாலும் சில திரு நங்கைகளை இரயில் மற்றும் பஸ்களில் காண முடியும். இவர்கள் அருகில் வந்து கைகளை தட்டி காசு கேட்பார்கள் இவர்களுக்கு காசு கொடுத்தால் எமது தலையை கைகளால் துடைத்து நெட்டி முறிப்பார்கள். இது அவர்கள் எமக்கு செய்யும் ஆசிர்வாதம் என பலர் கூறுவார்கள்.
அதே போல் காசு கொடுக்காது விசமம் செய்தால் எங்களை நோக்கி விரல்களை முறித்து செல்வார்கள் இது சாபம் என கூறப் படுகின்றது. இந்த சாபம் மற்றும் ஆசிர்வாதம் உண்மையா? அரவாணிகள் என கூறப் படுகின்ற இவர்கள் சிவன் பார்வதி கலந்த அர்தநாரீஸ்வரர் அம்சம் என கூறப்படுவதோடு புதன் கிரகத்தின் அம்சம் எனவும் “சகாதேவ மாலை” என்ற ஜோதிட நூலில் குறிப்பிடப் படுகிறது.
சிவன், பிரமா, விஷ்ணுவிடம் ஆண் மற்றும் பெண்ணால் அழிவு ஏற்பட கூடாது என வரம் பெற்ற அரக்கர்களை அரவாணி என்றழைக்கப் படும் திரு நங்கைகள் அழித்ததாக கூறப் படுகின்றது. இதனால் தான் திருநங்கைகளின் சாபம், ஆசிர்வாதம் என கூறப் படுகிறது. இதில் எந்த அளவில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தவர்களே கூற வேண்டும்..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!