26 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு உரிமை கோரும் மூன்று கணவர்கள்.! அதிர்ந்து போன பொலீஸார்.!!
இந்தியாவில் இளம் பெண் ஒருவர் மூன்று ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் பிறந்திருக்கும் குழந்தை யாருடையது என திரைப்படத்தில் போல் சண்டை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு 30 வயது இளைஞருடன் திருமணம் நடந்த நிலையில் 6 மாதங்கள் மட்டுமே வாழ்ந்துள்ளனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரிந்துள்ளனர். ஆனால் கணவரை பிரிந்த குறித்த பெண் கணவரின் தம்பியை காதலித்ததுடன் அவருடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.
குழந்தை அண்ணன் தம்பி இருவரின் ஜாடையிலும் இல்லாமல் அவர்களின் தங்கையின் கணவரது சாயலில் இருந்துள்ளது. இதனால் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கணவரின் தங்கையின் கணவர் தனது குழந்தை என ஒத்துக் கொண்ட நிலையில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பொலீஸுக்கு சென்ற நிலையில் டி என் ஏ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.!!