யார் என்றே தெரியாத பெண்ணை 6 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற காவலர்.! குவியும் வாழ்த்துக்கள்..!!
இந்தியாவில் காவலர் ஒருவரின் செயல் பாராட்டு பெற்று வருகிறது. கல்லுக்குள் ஈரம் போல் எப்போதும் காக்கிச் சட்டைக்குள் மனிதநேயம் இருக்கும் என்பார்கள் அதற்கு எடுத்துக் காட்டாக காவலர் ஷேக் அர்ஷத் நடந்து கொண்டது மக்களை கொண்டாட வைத்துள்ளது.
நேற்றைக்கு முன் தினம் திருப்பதி ஏழு மலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். நடந்து சென்றுகொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். திருப்பதியில் உள்ள மலை சரிவில் என்பதால் அருகில் மருத்துவ உதவி பெறுவது கடினமாக இருந்துள்ளது,
இதன் போது அங்கு வந்த ஷேக் அர்ஷாத் என்ற காவலர் குறித்த பெண்ணை தன் தோளில் சுமந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவ உதவி பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த பகுதியில் நாம் நடந்து செல்வதே கடினம்,
இதில் பெண்ணை தன் தோளில் சுமந்து சென்ற காவலருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது, மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இது அர்ஷத்தை போல் சிலர் தான் இருக்கின்றனர்.!!