தாய் தந்தை வீட்டிற்கு வந்த கர்ப்பிணி மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்.! கதறி துடிக்கும் தாய்.!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாதையன்தொட்டி கிராமத்தில் கர்ப்பிணி மகளை தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். 60 வயதான இவருக்கு மாதேவி என்கிற மனைவியும், வெங்கடலட்சுமி என்ற 21 வயது மகளும் இருந்த நிலையில் கடந்த வருடம் மகளுக்கு கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து வைத்தார்.
திருமணமாகி கணவர் வீட்டில் இருந்த வெங்கட லட்சுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் பண்டிகை கொண்டாட கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். தாய் வீட்டிற்கு வரும் பெண்கள் புகுந்த வீட்டிற்கு செல்ல சில நாட்கள் ஆகும், அத்துடன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் தாய்வீட்டில் சில நாட்கள் இருந்திட்டு வா என கூறிவிட்டு ஸ்ரீனிவாசன் சென்றுள்ளார்.
தாயுடன் மகிழ்ச்சியாக இருந்த வெங்கட லட்சுமி தந்தை குடித்து விட்டு சண்டை போட ஆரம்பித்ததும் வெறுத்து போய் உள்ளது. தாய் தந்தையின் சண்டை பெரிதானதுடன் நாட்டு துப்பாக்கியை எடுத்து தந்தை தாயை சுட முயன்றுள்ளார். தாயை காப்பாற்ற இடையில் சென்ற வெங்கடலட்சுமியின் வயிற்றில் குண்டு பட்ட நிலையில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து வெங்கட லட்சுமி இறந்துள்ளார்.
வெடி சத்தம் கேட்டு அயலவர் வந்த போது அருணாச்சலம் தப்பி ஓடியுள்ளார். உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் பொலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். மனைவியையும் குழந்தையையும் இழந்த சோகத்தில் மாமனார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி ஸ்ரீனிவாசன் பொலீஸில் புகார் அளித்துள்ளார்.!!