பிரபல நடிகரின் மகனை காதலித்த இலங்கை வம்சாவளி பெண்.! காதலன் இறந்து 2 வருடமான பிறகும் இப்படியா.? இது தான் உண்மை காதல்.!!
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாட்டின் பெருமை காப்பத்தில் இந்திய இலங்கை பெண்களுக்கு நிகர் யாரும் இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக வெளி நாடுகளில் வாழும் பல பெண்கள் ஆடை, கலாச்சாரங்கள் என மாறாமல் அப்படியே சிலர் கடைப்பிடிக்கின்றனர். அப்படி இலங்கை வம்சாவளி பெண்ணான நேத்ராவும் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்து வருகிறார்.
நேத்ரா தற்போது வெறும் 21 வயது தான் ஆகிறது. தனது 17 வயதில் பிரித்தானியாவின் பிரபல சீரியல் நடிகரான Nicholas Lyndhurstஇன் மகனான ஆர்ச்சியின் காதலில் விழுந்தார். நேத்ரா மற்றும் ஆர்ச்சி இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து நடித்த போது காதல் ஆரம்பமானது. இந்த காதல் ஒரு வருடம் மட்டுமே தொடர்ந்த நிலையில் உலகில் 800ல் இருவருக்கு மட்டுமே வரும் ஒருவகை புற்று நோயால் பாதிக்கப் பட்டார் ஆர்ச்சி.
காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கைவிரித்த போதும் ஒரு வருடம் காதலனை காப்பாற்ற போராடினார். ஆனால் விதி 2 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019ம் ஆண்டு ஆர்ச்சியின் உயிரை பிரித்தது. தற்போது ஆர்ச்சி இறந்து இரண்டு வருடமாகிறது. ஆர்ச்சியின் நினைவில் மட்டுமே வாழ்கிறார் நேத்ரா. ஆர்ச்சியின் தாயார் லூர்சி கூறுகையில் இருவரது காதலை பார்த்து அப்போது அதிர்ந்து போனேன்,
இப்போதும் அதே காதலுடன் இருக்கிறாள் நேத்ரா. என் மகன் கொடுத்து வைக்கவில்லை நேத்ராவுடன் வாழ்வதற்கு. இங்கு காதலை பிரிந்து அடுத்த நாளே ஜோடி தேடிக்கொள்வார்கள் 2 வருடம் ஆகிவிட்டது, ஆர்ச்சி தவிர வேறு எண்ணம் இல்லை நேத்ராவிடம், வியப்பாக இருக்கிறது, அதே நேரம் பயமாகவும் இருக்கிறது. நேத் ரா வாழ வேண்டியவள். வாழ்க்கை இருக்கிறது அவளுக்கு என தெரிவித்துள்ளார்.
காதலனின் 2 வருட பிரிவு பற்றி நேத்ரா எழுதியுள்ள கடிதத்தில் உன்னை சந்தித்த நாள் முதல் என்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாய். உன் அருகாமை என்னை உன்னை அதிகமாய் நேசிக்க வைத்தது. நீ என்னுள் இருக்கிறாய், உன்னை யார் வேண்டுமானாலும் பிரிக்கட்டும் நீ என்னுள் இருக்கிறாய், காத்திரு ஒரு நாள் நானும் உன்னிடம் வந்துவிடுவேன் என கூறியுள்ளார். இதை பார்த்தவர்கள் இந்த காலத்தில் இப்படியுமா என வியந்து வருகின்றனர்.!!