பெண்களை மிரட்டி 8 திருமணம், பெற்ற பிள்ளையை கூட விட்டுவைக்காத மிருகம்.,! ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்.!!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் 8 இளம் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன் பெற்ற மகளையும் பாலியல் தொழிலாளியாக மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த அருண் கீதாஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார், திருமணம் செய்துகொண்ட பின்னர் கீதாஞ்சலியிடம் மிக மோசமாக உறவு கொண்டுள்ளார்,
கீதாஞ்சலிக்கு குழந்தை கிடைத்ததை தொடர்ந்து சில வருடங்களில் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறினார்.. இதனை தொடர்ந்து லட்சுமியிடம் சென்று கீதாஞ்சலி பேசிய போது தான் அருண் லட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்ததை அறிந்துகொண்டார் கீதாஞ்சலி. இந்த திருமணங்கள் இப்படியே நிற்காமல் சுமார் 8 பெண்கள் வரை சென்றுள்ளது.
நெருங்கி பழகிய பின் கத்தியை காட்டி திருமணம் செய்வது தான் அருண் குமாரின் வேலையாக இருந்துள்ளது. அருணுக்கு விபச்சார மற்றும் போதை பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் பெண்கள் கொடுக்க முடியாத நிலையில் மூத்த மனைவி கீதாஞ்சலி மற்றும் இரண்டாவது மனைவி லட்சுமி இருவரையும் அருண் சொல்லும் நபர்களுடன் படுக்கையை பகிரும் படி கட்டாய படுத்தியுள்ளார்.
அது மட்டும் இன்றி மகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி பெண்கள் கடத்தல் குழுவினருக்கு கொடுக்க முயன்றுள்ளார். பொலீஸாருக்கு புகார் கொடுத்தும் பயனில்லை, அருண் பணத்தை கொடுத்து சமாளித்து விடுவான், பலமுறை இது நடந்ததை தொடர்ந்து மாநகர பொலிஸ் தலைவர் மனிஷ் குமார் அவர்களிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அருண் குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் பல பெண்கள் அருண்குமார் மீது புகார் கொடுத்து வருகின்றனர்.!!