பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த மனைவி..! கணவனின் மரணத்தை அறியாமல் பெண் குழந்தை பெற்ற சோக சம்பவம். யாருக்கும் இந்த கொடுமை வேண்டாம்..!!
பிரசவத்திற்கு இந்தியா வந்த இளம் பெண்ணின் கணவர் துபாயில் உயிரிழந்த நிலையில் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த நிதின் சந்திரா என்ற இளைஞன் ஆதிரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த பின் இருவருக்கும் துபாயில் வேலை கிடைக்க அங்கு சென்று செட்டிலானார்கள். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த ஆதிரா தனது பிரசவம் சொந்த நாட்டில் நடக்க வேண்டும் என விரும்பியதால் நீதிமன்ற அனுமதியுடன் மே மாதம் 7ம் திகதி இந்தியா வந்தார். கணவர் நிதின் துபாயில் பணி புரிந்து வந்தார்.
ஆதிராவின் உடல் நிலை பலவீனமாக இருந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். துபாயில் பணி புரிந்து வந்த நிதின் நேற்றைய தினம் மனைவியுடன் பேசிவிட்டு உறங்க சென்ற போது படுக்கையிலேயே மரணமடைந்துள்ளார். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், மற்றும் இதயம் சம்மந்தப் பட்ட நோயால் பாதிக்கப் பட்டிருந்த நிதின் படுக்கையில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் நிதினின் மரணத்தை ஆதிராவிற்கு கூறாமல் பெற்றோர் மறைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆதிராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆதிராவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு நிதின் இறந்த விடயம் இன்னும் ஆதிராவிற்கு தெரியப் படுத்தப் படவில்லை. இந்த நிலையில் நாளைய தினம் நிதினின் உடல் இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது..!!