இதயத்தை பாதுகாத்து இரத்த குழாயை தூய்மை செய்யும் இயற்கை மருத்துவம்..! அதிகம் பகிருங்கள்…!!
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பத்திரிகை ஆய்வுகளில் மட்டுமல்லாமல் மருத்துவம் மற்றும் அறிவியலின் படி, நடைபயிற்சியானது அனைத்து நாள்பட்ட நோய்களின் ஆபத்துக்களைக் குறைக்க உதவுகிறது. பெரும்பாலான மருத்துவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள நோய்களுக்கு நடைபயிற்சியையே பரிந்துரைக்கின்றனர்.
தினமும் 30 நிமிடம் நடை பயிற்சி செய்வதால் உங்களிற்கு ஏற்படப்போகும் நன்மைகள் எவையென்பதைப் பார்க்கலாம்.
நடைபயிற்சி உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. விஞ்ஞான ஆய்வுகளின்படி குறிப்பாக பெரியவர்கள், மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அந்த நோயின் ஆபத்தை குறைக்க நடைபயிற்சிகளை மேற்கொள்வது ஆரோக்கியமானது என்று தெரிய வந்துள்ளது. நடக்கும்போது இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாக அயங்குகின்றது. இது இதயத்தை மேலும் சீராக இயங்க வைக்கும்.
நடைபயிற்சி என்பது உங்கள் உடலிலுள்ள கொழுப்புக்களை அகற்றி ஒரு சிறந்த நிறையைப் பேணுவதற்கு உங்களுக்கு உதவும் ஆரோக்கியமான பயிற்சி ஆகும். அமெரிக்க விஞ்ஞானிகள், பருமனான நோயாளிகள் பலரை ஒன்றாகச் சேர்ந்து ஒரு நகரத்தைச் சுற்றி நடைபயிற்சி பஸ் என அழைக்கப்பட்ட ஒரு நடைபயிற்சி முறையை வடிவமைத்தனர். 8 வாரங்கள் கழித்து, அவற்றின் எடை சோதிக்கப்பட்டபோது, பங்கேற்றவர்களில் 50% க்கும் அதிகமானவர்கள் 5 பவுண்டுகள்ஐ இழந்துள்ளனர்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் நடைபயிற்சியானது முக்கிய பங்கு வகிக்கி்னறது. நடக்கும்போது இரத்தம் சீராக அனைத்து இடங்களுக்கு பரவுகின்றது. இது இரத்தத்தின் சீரான தன்மையைப் பேண உதவுகின்றது. ஜப்பான் வைகயாமா மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்தம் கொண்ட தனிநபர்களுக்கு ஒரு பரிசோதனையை நடத்தினர்,
அங்கு 83 பங்கேற்பாளர்கள் 12 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 படிகள் ஏறி நடந்துகொண்டனர். 12 வாரங்கள் முடிவில், அவர்கள் இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அவ்வளவு தூரம் நடக்க முடியாவிட்டாலும் தினமும் 30 நிமிடங்கள் நடப்பது போதுமானது.