சீனா ரசாயனத் தொழிற்சாலையில் வெடி விபத்து…
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெபே மாகாணத்தில் உள்ள ஜான்ஜியகோ என்ற இடத்தில் இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. அதன் அருகிலே தொழிற்சாலைக்கு பணிக்கு வரும் பணியாளர்களின் கார்களும் தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் லொறிகளும் நின்றிருந்தனர். அதில் ஒரு லொறியில் ரசாயனக் கலவை இருந்தமையால் அதிலிருந்து திடீரென வெடித்து லொறி தீப்பற்றி எரிந்து அருகிலிருந்த கார், லொறிகளெல்லாம் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்ததால் ,
அப்பகுதி முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்கு தீவிர முயற்சி எடுத்தும் தீயை அணைக்க முடியவில்லை பல மணிநேர போராட்டங்களின் பின்னரே தீயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தில் இருபத்தியிரண்டு பேர் இறந்துள்ளதாகவும் இருபத்தியிரண்டிற்கு மேற்பட்டோர் காயமடைந்தும். முப்பத்தியெட்டு லொறிகள், பன்னிரெண்டு கார்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இது போன்றதொரு முறையாக சேமித்து வைக்கப்படாத ரசாயனம் வெடித்து 173 போ் வரையில் காயமடைந்துள்ளனர், ஆனால் இதுவே பெரிய வெடி விபத்து என அந் நாட்டின் பிரதி நிதி ஒருவர் கூறியுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”