வியாபாரத்தில் பெரும் இலாபம் பெற – வாழ்வில் வெற்றி பெற அசத்தலான ஐடியாக்கள்!
வெற்றியாளர்கள் எப்போதும் பெருங்கனவுகளைக் காண்பவர்களாக இருப்பார்களாம். நீங்கள் உங்கள் பிசினெசில் இலாபம் ஈட்டவேண்டும் என்கின்ற பெருங்கனவோடு அன்றாடம் போராடிக் கொண்டிருப்பவரா? அப்போ உங்களுடைய வெற்றி பெற வேண்டும் என்கின்ற பெருங்கனவு விரைவிலேயே நிறைவேறப் போகின்றது பாருங்கள். அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
பிசினெஸ் ஒன்றில் பெரும் வெற்றியை எவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு பல முறை முயன்று சாதனை படைத்தவர்கள் கூறுகின்ற தந்திரோபாயங்களை நீங்கள் அறிவீர்களா? இல்லையென்றால் கண்டிப்பாக அறிந்துகொள்ளுங்கள்.
1.அனைத்தையும் உங்களுக்கான வாய்ப்ப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.
வெற்றியோ தோல்வியோ, ஏற்றமோ இறக்கமோ அனைத்தையும் உங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். தோல்வியின்போது நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தைக் கொண்டு அடுத்த முயற்சியை சரி செய்து கொள்ளுங்கள்.
2.மாற்றத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்
அனைவருக்கும் தனித்தனியாக சில கொள்கைகள் முறைமைகள் இருக்கும். ஆனால் உங்களுடைய வாடிக்கையாளர்கள் என்பவர்கள் எப்போதும் புதிய விடயங்களில் ஆர்வம் உடையவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் உங்கள் வியாபார அணுகு முறைகளிலும் மாற்றங்களை கொண்டு வாருங்கள்.
3.வாடிக்கையாளருடனான உறவைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் சிறிய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி பெரிய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்கள் என்பவர்கள்தான் உங்களுடைய பெரும் நோக்கமாக இருக்க வேண்டும். பெரும் நிறவனங்களில் இருக்கின்ற வாடிக்கையாளர் கவனிப்புச் சேவையை கருத்திற் கொண்டாலே உங்கள் தொழில் ஒரு படி மேலுயர்ந்து விடும்.
4.அதிரடியாக சில நடைமுறைத் திட்டங்களைக் கொண்டு வாருங்கள்.
தினமும் ஒரேமாதிரியான விற்பனை முறை என்பது அனைவருக்கும் சலித்து விடும். எனவே உங்களுடைய வியாபார முறையில் சில அதிரடித் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படத்துங்கள்.
உதாரணமாக- ”ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” ”இந்த அரிய வாய்ப்பு இன்று மட்டும்” ”20 வீத தள்ளுபடி இன்றும் நாளையும் மட்டும்” இவ்வாறான குறுகிய கால அதிரடித் திட்டங்கள் வாடிக்கையாளரை உங்களை நோக்கித் திரம்பிப் பார்க்க வைப்பதோடு வாங்கவும் வைக்கும்.
.5.உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
சுய மதிப்பீடு என்பது பிசினெசில் மிகவும் முக்கியமானது. சில கேள்விகளைக் கேட்டு அதிலிருந்து பெற்ப்படும் விடைகளின் மூலமே உங்களை நீங்கள் சுய மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.
இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
- நான் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் என்ன?
- பிரச்சினைகளை நான் எவ்வாறு கையாள்கின்றேன்?
- நான் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?
- இதுவரை கால தொழிலில் நான் சாதித்தது என்ன?
இவ்வாறான கேள்விகள் உங்களை வளப்படுத்தவதோடு உங்கள் தவறுகளை உங்களுக்கே சுட்டிக்காட்டும்.
”நீங்கள் முடியாது என்று நினைத்து செய்யாதிருப்பதை எங்கோ ஒருவன் செய்து முடித்துவிட்டுத்தான் இருக்கின்றான்”
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”