கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஆண்ட்ரூ ஷியர் திடீர் ராஜினாமா??
கடந்த அக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவை தோற்கடிக்க தவறியதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ஆண்ட்ரூ ஷியர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அவர் திடீரென தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டும் வரையில் அவர் கட்சித் தலைவர் பொறுப்பை தொடர்வார்.
அவர் 2017 ஆம் ஆண்டு மே மாதம் தான் தன்னை எதிர்த்து நின்ற 12 பேரை வென்று கட்சித் தலைவராக பதவியேற்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தோல்வி அடைய செய்ய தவறியதாக கன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவரான ஆண்ட்ரூ ஷியர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டாலும், மற்றொரு விடயம் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, ஆண்ட்ரூ தனது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி நிதியுதவி செய்துள்ளது. மேலும் இந்த தகவலை கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு இடையிலேயே பிளவை ஏற்படுத்தியது. பலர் ஆண்ட்ரூவுக்கு ஆதரவு கூறியிருந்தாலும், மற்றவர்கள் ஆண்ட்ரூவின் பிள்ளைகளுக்கு கல்வி செலவுக்காக நிதியுதவி செய்தது முறையற்றது என்று குரல் கொடுத்தனர். எனவே இந்த விடயம் தான் உண்மையில் ஆண்ட்ரூ தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய காரணமாக அமைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.