மலேசியாவில் பூனைகளால் தண்டனைபெறுவோர் அதிகரிப்பு..!
மலேசியாவில் மிருகவதைக்கான தண்டனை கடுமையாக அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் அங்கு பூனைகளுக்கு தொல்லை விளைவித்ததால் தண்டனை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் அவ்வாறு பூனைகளைக் கொலை செய்த குற்ற வழக்குகள் மூன்று இடம் பெற்றுள்ளன.
கடந்த மாதம் பூனை ஒன்றை சலவை இயந்திரத்தில் இட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் இருவர் ஜாமீன் தொகை செலுத்த தவறியதால் தொடர்ந்தும் சிறையில் இடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அங்கு பூனை ஒன்றினை சலவை இயந்திரத்தில் இட்டு கொலை செய்த குற்றம் சாட்டப்பட்டு வந்த 41 வயதுடைய ஒரு நபர் கடந்த ஒரு மாதகாலம் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றுக் கைதாகியுள்ளார். அவரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”