மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்.. அதிர்ந்த குடும்பத்தினர் .!
அன்பு, கருணை, இவை இன்றளவில் மனிதர்களிடம் இருந்து பறிக்கப் பட்டுவிட்டது.கோபம், வெறுப்பு, என எப்போதுமே மிருக குணங்கள் மட்டுமே நிறைந்துள்ளது. நேற்றைய தினம் டியூசன் ஆசிரியர் ஒருவரின் செயலும் அப்படி தான்.
டெல்லியை சேர்ந்த டியூசன் ஆசிரியரான உபேந்திர சுக்லா என்பவர் தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர வைத்துள்ளது. வழக்கமாக காலையில் எழுந்துவிடும் மகளின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்காததால் தாயார் சென்று சுக்கா வீட்டு கதவை தட்டியுள்ளார்.
ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த தாயார் பொலீஸாருக்கு அறிவித்துள்ளார். கதவை உடைந்து வீட்டுக்குள் சென்ற பொலீஸார் அதிர்ந்துள்ளனர். அங்கு மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அருகில் கத்தியுடன் சுக்லா அமர்ந்திருந்துள்ளார்.
உடனடியாக கைது செய்த பொலீஸார் சடலங்களை மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து பொலீஸார் தெரிவிக்கையில் 7, 5, மற்றும் 2 மாத குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப் பட்டுள்ளனர். சுக்லாவின் மனைவி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு வந்துள்ளார்.
இதனால் சுக்லா கோபத்தில் இருந்துள்ளார். இந்த கோபத்தின் காரணமாக 4 பேரையும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது பற்றி சுக்லா இன்னும் பொலீஸாருக்கு எதுவும் சொல்லவில்லை..!!