திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கேள்விப் பட்டிருக்கின்றோம் ஆனால் சில திருமணங்களை நாகரீகம் பெண்ணியம் என கூறி சிலர் நரகமாக்கிக் கொண்டிருகின்றனர். யாராக இருந்தாலும் கைகொடுத்து கட்டியணைத்த அன்று ஆண்ட பிரிட்டிஷ் நாட்டவர்கள் தமிழ் பெண்களை கண்டால் மட்டும் கையெடுத்து கும்பிட்டு கடந்து சென்றதாக படித்திருக்கின்றோம்,
அதே போல் எமது பாட்டி தாத்தா கதை கூற கேட்டிருப்போம் இதற்கான ஒரே காரணமாக இருந்தது மஞ்சள். திருமணமாகிவிட்டால் விட்டால் பெண்களுக்கு அன்று தங்கத்திற்கு பதில் தாலியாக மஞ்சள் கயிறு அணியும் பழக்கம் இருந்தது. அன்று பதிவு திருமணங்கள் இருக்கவில்லை ஆனால் பெண்கள் பத்தினிகளாக இருந்தார்கள்,
இதனால் தான் இன்று வரை பெண்களுக்கான அடையாளமாக தாலி இருக்கிறது. கட்டிலில் மட்டும் அல்ல மார்பில் கணவனை சுமக்கிறாள் பெண். தாலி அணிவதை இன்றைய காலத்தில் சில பெண்கள் அடிமைத்தனம் என்கிறனர், ஆனால் தாலி தான் ஒரு பெண்ணுக்கு வேலியாக இருக்கிறது.
தாலி, மெட்டி, பொட்டு, இது தான் தமிழ் பெண்ணின் அடையாளம். இதனை ஈழம் என்கிற புனித பூமியில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டு மோகங்களில் சிக்கிய சிலர் சிதைத்து வருகின்றனர்.. இன்றைய தினம் கணவனுக்கு தாலி கட்டும் பெண் ஒருவரின் வீடியோவை பார்த்து அதிர்ந்து போனோம். இவர் புலம்பெயர்ந்து சுவிஸில் வாழ்கிறார். பெரும் பணம் பெண்ணின் பெருமையை மறைத்துவிட்டது