ரஷ்யா ஏவுகணை தளங்களை நிர்மாணிப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!!
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்கா ஏவுகணை தளங்களை நிர்மாணிக்காமல் ரஷ்யாவும் புதிய ஏவுகணை தளங்களை நிர்மானிக்காது என ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது. ரஷ்யா கால ஆயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளதாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்கு இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடந்த மாதம் நடுத்தர அணு உடன்படிக்கையிலிருந்து முற்றாக விளக்கியுள்ளது. பின்னர் இந்த உடன்படிக்கையை ரஷ்யா மீறியுள்ளதுடன் தடைசெய்யப்பட்ட ஏவுகணையினை பயன்படுத்தியதாக கூறி அமெரிக்கா வெளியேறியிருந்தது. கிறம்ளின் மாளிகை வைத்து அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
அந்த ஒப்பந்தத்திற்கு அமைய பூமியில் இருந்து 310 மைல் முதல் 3 ஆயிரத்து 400 மைல் தூர ஏவுகணைகளை பிரயோகிக்க தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கருத்து கூறுகையில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட திட்டங்களை அமெரிக்கா மீறும் பட்சத்தில், ரஷ்யா குறுகிய மற்றும் நடுத்தர தரை ஏவுகணைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.