பேஸ்புக்கினால் தொடரும் விபரீதம்..! சென்னையில் சம்பவம்..!
பேஸ்புக் பலரது வாழ்க்கையை சீரழித்துகொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது தான் உண்மை. அதிலும் பாடசாலை கல்லூரி மாணவர்களை இன்னும் அதிகமாய் பாதிக்கின்றது . இதற்கு பெற்றோரும் காரணமாகின்றர். இப்படி சென்னையில் நடந்த விடயம் தான் இது .
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 20 சவரன் நகையை பேஸ்புக் இளைஞன் ஒருவனுக்கு கொடுத்து ஏமாந்துள்ளார். சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராகுல் குமார் இவர் தான் தான் உலகிலேயே அழகான இளைஞன் என நினைத்துநினைத்து பேஸ்புக் ஐடி ஒன்று திறந்துள்ளார். அதில் தனது பெயரை வில்லியம்ஸ் குமார் என பதிவு செய்து கல்லூரி மாணவிகளுடன் கடலை போட தொடங்கியுள்ளார்.
இவரது காதல் வார்த்தையில் மயங்கிய சிறுமி ராகுலை சந்தித்து ஊர் சுற்ற தொடங்கியுள்ளார். சிறுமியை ஆயுதமாக பயன்படுத்திய ராகுல் வீட்டில் இருந்து 20 சவரன் வரை தங்க நகைகளை வாங்கி உள்ளார் . அவசர தேவைக்கு நகைகள் தேடிய பெற்றோருக்கு நகை இல்லாததால் சிறுமியிடம் விசாரித்ததை அடுத்து சிறுமி நடந்ததை கூரியுள்ளார்.
அதனை தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகரை அடுத்து இளைஞரை கைது செய்து பொலீஸார் விசாரணை நடத்து வருகின்றனர்..!