வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு 500 கோடி அபராதம் – இந்திய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி…!
உலகப் புகழ்பெற்ற வோல்க்ஸ்வேகன் நிறுவனமானது இந்தியாவின் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது எனக் குறிப்பிட்டு இந்தியாவின் பசுமைத் தீர்ப்பாயத்திடம் மேற்கொள்ளப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் அந் நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் 500 கோடி அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிறுவனத்தின் தயாரிப்பு கார்களில் பொருத்தப்பட்டிருந்த ஓர் கருவி டீசல் என்ஜின்களில் இருந்து காற்று வெளியேறும் அளவை குறைத்து காட்டி காரின் செயல் திறனை உயர்த்தி காட்டும் வகையிலான சாப்ட்வேர் ஒன்று இணைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் 3.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில் இக் கார்களால் டெல்லியின் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றுவதாக ஓர் ஆசிரியர் உட்பட பலரால் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட 100 கோடி இடைக்கால இழப்பீட்டுத் தொகை என்பது தற்போது 500 கோடி அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”