வளர்த்த எஜமானரையே கடித்துக் குதறிய நன்றி கெட்ட ஜென்மம்…
சிங்கங்களை வைத்து இனப்பெருக்கம் செய்யும் நோக்கில், கூண்டில் அடைத்து வைத்த ஆண் சிங்கத்தால் நடந்த அவலம். வீட்டில் அடைத்து வைத்த ஆண் சிங்கம் ஒன்று தனது எஜமானாரான 33 வயதான இளைஞரை அடித்துக்கொன்ற சம்பவம் செக் குடியரசில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.மைக்கேல் பிராசெக் எனும் குறித்த இளைஞர் தனது வீட்டில் ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கம் ஆகிய சோடியினை வளர்த்துள்ளார். அவற்றினை வீட்டிலுள்ள கூண்டினுள் அடைத்த நிலையிலேயே அவர் வளர்த்து வந்துள்ளதுடன் அவ்வப்போது அவற்றின் அருகே சென்றுள்ளமைக்கான
புகைப்பட ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.இப்படியிருக்கின்ற நிலையில் கூட்டைத் திறந்து சிங்கங்களைப் பார்வையிடச் சென்றபோது ஆண்சிங்கம் அவரைக் கடித்துக் குதறி இரத்த வெள்ளத்தில் யாரும் மீட்க முடியாத சூழலில் இருந்துள்ளது.
அவரின் உடலை மீட்பதற்காக இரண்டு சிங்கங்களையும் பொலிசார் சுட்டுக் கொண்ட பின்னர் தான் உடலை மீட்டுள்ளனர்.மைக்கேல் பிராசெக் ஏற்கெனவே விலங்குகளை வளர்த்த குற்றத்திற்காக தண்டப் பணம் செலுத்தியுள்ளார்.தற்பொழுது அதனை மீறியே இரண்டு சிங்கங்களையும் வளர்த்துள்ளார் என்பது தெரிய வருகின்றது
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”