எத்தியோப்பியா விமான விபத்தில் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய விமானி…
தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது.அந்த விமான விபத்தில் ஒரு பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம்.அவர் இரண்டு நிமிடம் தாமதமாக வந்தது தான் காரணம் என தெரியவந்துள்ளது. விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்து விட்டனர்.
நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ் என்பவரே 2 நிமிடம் தாமதமாக வந்ததால் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது சம்மந்தமாக அந்தோனிஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 2 நிமிடம் தாமதமாக வந்ததால் கேட் மூடப்பட்டுவிட்டது.யாரும் எனக்கு உதவவில்லை. இதனால் பைத்தியமாக உணர்ந்தேன். ஆனால்
அது எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்து விட்டது, விமான நிலைய காவல்த்துறையினர் கூறினார்கள் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்ல இருந்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது.நீங்கள் தான் உயிருடன் உள்ளீர்கள் என்று கூறி விமானத்தின் டிக்கெட்டையும் பதிவிட்டுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”