பூண்டு-வெங்காயம் இரண்டையும் சேர்த்து குழம்பு வைக்கலாமா???
உடல் சூட்டை குறைப்பதற்கு இதை பயன்படுத்தலாம். சளித்தொல்லை உள்ளவர்களும் சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடுவதற்கு சம்பல் செய்யலாம். சம்பல் தொடர்ந்து சாப்பிட பிடிக்காதவர்கள் இதில் குழம்பு செய்து சாப்பிடலாம்…
தேவையானவை: பூண்டு – 4 பல், வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை , கொத்தமல்லி – சிறிதளவு, புளித் தண்ணீர் – ஒரு கப்.
செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.