ஆண்களே 30 வயது வரை திருமணம் செய்யவில்லையா? அப்படியானால் கட்டாயம் இதனை செய்யுங்கள்.. இல்லாவிட்டால் ஆபத்து.!
ஆண்களின் திருமண வயது என்பது சாதாரணமாக இருபத்தைந்தை தாண்டிய பின்னதாகவே இருக்க வேண்டும். அதனால் தானே என்னவோ ஆண்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதை தாண்டிய பின் திருமணம் செய்துகொள்கிறனர். இதற்காக இவர்கள் சொல்லும் காரணம் படித்து முடித்து வேலை தேடி அக்கா தங்கையை திருமணம் செய்து வைக்கும் போதே முப்பது வயதை தாண்டி விடுகிறது என்கின்றனர்.
அது என்னவோ உண்மை தான். ஆனால் அதன் பின் அவதானம் தேவை. 30 வயது வரை நாம் செய்த சில தவறுகள் எம்மை விரட்ட ஆரம்பிக்கும். அதில் இரண்டு ஒன்று மது அடுத்தது மாது. இத்துடன் அதிக டென்சன் என்ற பெயரில் அடிக்கடி ஊதித்தள்ளும் சிகரெட். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆண்மை குறைப்பாட்டை ஏற்பட செய்யும்.
30 வயதின் பின் சில ஹார்மோன்களும் பிரச்சனை கொடுக்க ஆரம்பித்துவிடும். இந்த மது, சிகரெட் ஆண்மை பிரச்சனையோடு நிற்பதில்லை பிறப்புறுப்பு புற்று நோய் என்ற ஒன்றையும் அறிமுகப் படுத்தி விடுகிறது. 30 வயது வரை எமக்கு இருக்கும் நோயெதிர்ப்பு சக்திகள் அதன் பின் குறைய தொடங்குவதற்கு இது போன்ற நோய்களே காரணமாகி விடுகின்றது.
இந்த பழக்கங்கள் இல்லாவிட்டால் கவலை படும் அவசியம் இருக்காது பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று வெப்பமான இடங்களில் வேலை செய்வதால் முடி உதிர்கிறது. 30 வயதில் எம்மை போன்றோர் 40 வயது போல் இருப்போம் அதனால் பெண் கொடுக்க பலர் மறுப்பார்கள்.
30 வயதின் பின் ஆண்களுக்கு வருகின்ற முக்கிய பிரச்சனைகளில் இந்த வழுக்கை தலை பிரச்சனையும் ஒன்று. அதிக வெப்பம் உள்ள இடத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் தங்கள் தலைமுடியை பாதுகாக்க அதிக நீர் குடிப்பதோடு வேலை முடிந்து உறங்கும் முன் எப்படியாவது நல்லெண்ணை சிறிதளவு தலையில் பூசி பின் உறங்குங்கள்.
அதே போல் 30 வயதின் பின் ஆண்களை தாக்கும் இன்னும் சில பிரச்சனைகளும் உருவாகிறது.
சிறு நீரக பிரச்சினை மற்றும் கல்லீரல் பிரச்சனை போன்றவை ஏற்படும் எனவே 30 வயதை கடந்தவுடன் முதலில் வைத்திய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பின் திருமணம் செய்யுங்கள்..!