கொடைக்கானலில் விடிய விடிய பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..!!
கொடைக்கானலில் விடிய விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றன.
இந்தியாவில் பல மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் இயற்கைக்கு எதிரான சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. அந்த வகையில் வடகிழக்கு மாகாணத்தில் பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில் கொடைக்கானல் பகுதியில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இடைவிடாது பெய்த தொடர் மழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீதியில் விழுந்துள்ளது. இதனால் அப்சர்வேட்டரி சாலை, வில்பட்டி சாலை, கூக்கால் சாலை போன்ற சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சில பகுதிகளில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதால், பல்வேறு இடங்க்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும், பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு இடையில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.