நள்ளிரவு முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்த ஜம்மு-காஷ்மீர்..!!!
இந்தியாவின் பிரபல மாநிலங்களில் ஒன்றான ஜம்மு- காஷ்மீர் நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட எல்லை பிரச்சினை மற்றும் பொருளாதார வர்த்தக ரீதியான பிரச்சினைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டு வந்த நிலையில் இந்தியா ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியுள்ளது.
இது போன்ற காரணங்களினால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் பிறந்த நாளான இன்று நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதிகாரப்பூர்வமாக பிரிந்தது. மேலும், ஜம்மு- காஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக இன்று பதவியேற்கவுள்ளார்.