இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
இந்தியாவில் சீரற்ற காலநிலையில் நிலவி வருகின்றது. அங்கு பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பலத்த காற்று ஏற்ப்பட்டுள்ளது. இதனால் கடலோரங்களில் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடந்த 30 திகதி சென்னையில் மாக புயல் ஏற்பட்டிருந்தது இன்று சென்னை: வங்கதேசம் – மேற்கு வங்கத்திற்கு இடையே புல்புல் புயல் கரையைக் கடக்கும் வேளையில் ஒடிசாவிலுள்ள 14 மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒடிசாவிலுள்ள 14 மாவட்டங்களிலும் இந்த புல்புல் புயலால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும், எதிர்வரும் 9 ஆம் திகதி பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார். நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் இந்த புயலால் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடிக்க சென்றவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்பவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் திகதி ஒடிசாவை தாக்கிய ஃபானி புயலால், 64 பேர் உயிரிழந்துள்ளனர்.