இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை… மண்சரிவில் சிக்கிய 06 பேர் உயிருடன் மீட்பு…!!!
தமிழகத்தில் பருவமழை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அதிகாலை தொடக்கம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்ற காரணத்தால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி உயிருக்கு போராடிய ஆறு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜீலியட் என்பவர் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் மண்சரிவில் சிக்கி புதைந்துள்ளார்.
அதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஜீலியட்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் பென்ட்ஹில் பகுதியிலும் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த ரேவதி மற்றும் நான்கு குழந்தைகள் மண்சரிவால் ஏற்பட்ட சமையல் அரையின் கூரை சரிந்ததில் சிக்கிக் கொண்டனர். மேலும் அதையடுத்து பல மணிநேரம் போராடிய பின்னர் மீட்புப்படையினர் 05 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்..