மனைவியின் கை, கால்களை கட்டி நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணவன்..!!! ஆந்திராவில் அரங்கேறும் கொடூரம்..!!!
ஆந்திர மாநிலத்தில் அனந்தபுரம் மாவட்டம் கதிரியைச் சேர்ந்த மல்லேஷ் என்பவர் மது அருந்தும் பழக்கம் உடையவர். அவர் ஒவ்வொரு நாளும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மல்லேஷ் தனது உயிர் நண்பனான விஜயகுமாருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் தனிமையில் இருந்த தனது மனைவியின் கை, கால்களை கட்டி கணவனே தனது நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். கணவரின் இந்த கொடூர செயலால் பாதிக்கப்பட்ட குறித்த பெண், தனது தாய் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த மல்லேஷ் மற்றும் அவரது நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.