பள்ளிக்கு செல்ல மறுத்த மகளை ஈவு இரக்கம் இன்றி மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த தாய்க்கு ஆயுள் தண்டனை..!!!
பள்ளிக்கு செல்ல மறுத்த மகளை ஈவு இரக்கம் இன்றி மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த கொடூர தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கோவில்பட்டி, பாரதி நகர் பகுதியை சேர்ந்த கோபால் – ராஜேஸ்வரி தம்பதியினரின் ஒரே மகளான மாரிசெல்வி என்பவர் அங்குள்ள காப்பகத்தில் படித்து வந்துள்ளார். ஆனால், மாரி செல்விக்கு படிப்பில் விருப்பமில்லாததால் காப்பகத்தில் இருந்து அடிக்கடி வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மாரிசெல்வி காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததால் கோபம் அடைந்த தாய் இராஜேஸ்வரி, மண்ணெண்ணெய் ஊற்றி மாரி செல்வியை உயிருடன் எரித்துள்ளார். அதில் படுகாயம் அடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த வழக்கில் இராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.