சுஜித்தின் இறப்பை தொடர்ந்து மீண்டும் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்..!! மீட்பு பணிகள் தீவிரம்.!!
இராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயதுடைய சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்டு விடலாம் என அனைவரும் ஆர்வத்துடன் உலகம் முழுவதும் மக்கள் வேண்டுதலோடு காத்து இருந்தனர். பல போராட்டங்களின் பின்னர் குழந்தையை சடலமாக மீட்டனார். அதே போல் இன்று இராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த மற்றுமொரு
5 வயதுடைய சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 05 வயதுடைய சிறுவன், விளையாடி கொண்டிருந்த வேளையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். தற்போது 15அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மிக அவதானமாக உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சிறுவனுக்கு தேவையான தண்ணீர் மற்றும் மருந்து என்பன கொடுக்கப்பட்டு வரும் நிலையில், பேரிடர் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தேவையாக மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், சிறுவனை உயிருடன் மீட்க முடியும் என்று பொலிஸார் தரப்பில் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
Rajasthan:4-yr-old child falls into borewell in Sirohi. Bhagirath Chowdhary, SDM Shivganj says,”The child is stuck at 15 feet. Water&oxygen has been supplied to the child. A team of doctors is present at the spot; rescue operation underway, a team of SDRF on its way to the spot”. pic.twitter.com/I8YsEtrjmI
— ANI (@ANI) 5 December 2019