உயிருக்கு போராடிய 03 பேரின் உயிரை காப்பாற்றிய உயிரிழந்த சிறுவன்…!!!
மிருக வேட்டையின் போது தவறுதலாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய உயிரிழந்த சிறுவனின் உடல் உறுப்புக்களை பயன்படுத்தி 03 சிறுவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது
கடந்த வியாழக்கிழமை அன்று 09 வயதுடைய கொல்டன் வில்லியம்ஸ் என்ற சிறுவன் அவரது தந்தையுடன் தென் கரோலினாவில் ‘Orangeburg County பகுதியில் முயல் வேட்டைக்காக சென்றுள்ளார். அங்கு தவறுதலாக தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளான்.
மேலும் இந்த நிலையில் உயிரிழந்த கொல்டன் வில்லியம்ஸின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல்கள் தானம் செய்யப்பட்ட நிலையில், அதனைக் கொண்டு மூன்று சிறுவர்களை உயிராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொல்டன் வில்லியம்ஸின் தாத்தா வின்ஸ் ஃபுர்டிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.