ஊடகவியலாளர் சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்..!!
பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு மாநாட்டின் பின்னர் நடைபெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பை, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். நேட்டோ தலைவர்களின் மாநாடு லண்டனில் நடைபெற்றது. மேலும் இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்ரின் டூருடோ, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் மற்றும் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் ஆகியோர், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கனடா பிரதமர் ஜஸ்ரின் டூருடோ,அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை கேலிக்குட்படுத்தும் வகையில் தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில், ஜஸ்ரின் டூருடொவை இரட்டை முகம் கொண்டவர் என டோனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அதோடு நேட்டோ மாநாட்டின் பின்னர் நடைபெற இருந்த ஊடகவியலாளர் சந்திப்பையும் டோனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.