வைத்தியரின் கவனயீனத்தால் கண் பார்வை இழந்து தவிக்கும் பெண்..!!! இந்தியாவில் நாளுக்கு நாள் அரங்கேறும் கொடூரம்..!!!
கடந்த ஜூன் மாதம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த வேடம்மாள் என்ற பெண் ஒருவர் தனது வலது கண் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கண்ணில் சதை வளைந்து வருவதாக கூறி அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகும் வேடம்மாளின் கண்ணில் வலி அதிகரித்து, நாளடைவில் பார்வை பறிபோனது.
அதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது, மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் கண் பார்வை பறிபோனது தெரியவந்தது. இது தொடர்பாக அரசு மருத்துவர்களிடம் கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து ஊத்தங்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்காததை அடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தனக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.