கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவேன் – ஜாக்கிசான்
சீனாவை புரட்டி எடுக்கும் கொடிய கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவேன் என ஜாக்கிசான் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாக்கி தற்போது 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகின்ற இந்த கொடிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1000திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
இந்த கொடிய வைரஸை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிப்பேன்.
இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான் இந்த கோரிக்கை என்று அவர் கூறியுள்ளார்.