10 மாத பச்சிளம் குழந்தையை கூட விட்டு வைக்காத கொரோனா..!
சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொடிய நோயான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இதுவரை 887 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை இந்தியாவில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற நிலையில், கர்நாடக மாநிலம், தக்ஷினா கன்னடா மாவட்டம், சஜ்பநாடு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 10 மாத குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சினைகளால் கடுமையாக அவதிப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையின் எச்சில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் குறித்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தையை உடனடியாக கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.