இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு..!!
கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 979 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது.