கணவன் தன்னிடம் பேசாததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை..!! இந்தியாவில் நடந்த சோகம்..!
இந்தியாவில் வேளாங்கண்ணி அருகே மேலத்தெரு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் 24 வயதுடைய சுகந்தி என்ற இளம் பெண் தஞ்சாவூரை சேர்ந்த 33 வயதுடைய ராஜா என்ற இளைஞனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான 2 மாதத்திலேயே ராஜா வெளிநாட்டுக்கு சென்று விட்டார், இந்நிலையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ராஜாவின் குடும்பத்தினர் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜாவும், சுகந்தியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதனால் சுகந்தி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. அதற்கு இடையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சுகந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.