இந்தியா – சீனா எல்லையில் பதற்றம். ! குவிக்கப் படும் இந்தியா மற்றும் சீனா வீரர்கள்..பறக்க தயாராகும் விமானங்கள்…!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா – சீனா எல்லையில் நடந்த மோதலில் 20 இந்தியா இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த நிலையில் எல்லைப் பகுதியில் சீனா சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவ வீரர்களை எல்லை பகுதியில் குவித்துள்ளதுடன் எந்த நிலையிலும் போருக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் இந்திய விமான படை தளபதி ஆர் கே எஸ் பதவுரியா எல்லைப் பகுதிகளுக்கு ரகசிய விஜயம் ஒன்றை மேட்கொண்டதுடன் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்திய செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது. அத்துடன் மிராஜ் 2000, சுகோய் 30 எம்கேஐ, ஜாக்குவார், போன்ற அதி நவீன தாக்குதல் விமானங்கள் லடாக்கின் கிழக்கு பகுதியை அண்மித்த பகுதியில் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்கா அபாச்சே வகை போர் ஹெலிகாப்டர்கள், சினூக் ரக ஹெலிகாப்டர்கள், மற்றும் காயப் பட்ட வீரர்களை அழைத்துச் செல்வதுடன் தேவையான பொருட்களை எடுத்து வர உதவும் எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா – சீனா எல்லையில் இராணவத்தினர் குவிக்கப் பட்டுள்ளனர். சீனா தாக்குதல் நடத்துமானால் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய ராணுவம் இருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்..!!