இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் பரபரப்பு – மீண்டும் சமாதானத்திற்கு அழைப்பு விடுக்கும் பாக் பிரதமர்…!
இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் மீண்டும்பாது காப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாத குழுவால் இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காஸ்மீர் புல்வாமா பகுதியில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படையினர் தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியமையும்..
அதன் தொடர்ச்சியாக இந்திய மிக் விமானம் ஒன்று பாகிஸ்தான் இராணுவத்தால் வீழ்த்தப்பட்டு இந்திய விமானி அபிநந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக காணொளி வெளியிடப்பட்டமையும் அந்த பதட்டங்களினை படம் பிடித்துக் காட்டும் நிலையில். பிரச்சனை தீவிரம் அடைந்தால் இருநாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் இருநாடுகளும் விவேகத்துடன் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் தங்களுக்கு ஆநற்றைய தாக்குதலால் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தாங்கள் எண்ணவில்லை என்றும் தங்கள் பகுதியில் அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் தங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின என்றும் இம்ரான் கான் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
தவறான கணிப்பினால் தான் போர்கள் இடம்பெறுவதாகவும் போர்கள் ஆரம்பித்தால் தானோ மோடியோ அதனை நிறுத்த முடியாது போய்விடும் என்றும் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்தால் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இம்ரான் கான்…
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”